ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியம், நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை தடுக்கும் காரணி அல்ல. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கையின் கலாசார பாரம்பரியம் எமது நாட்டின் இனங்களுக்கிடையிலான இடையூறாக தடையாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. அவ்வாறு ஏற்படுதவதற்குக் காரணம் இனவாத, பிரிவினைவாத அரசியல் தலைவர்களினால் மாத்திரமல்ல, இந்நாட்டில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை முகாமைத்துவத் துறையில் காணப்படும் குறைபாடுகளாலும் இது நிகழ்ந்துள்ளது.